இவ் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவுசெய்யப்படாவிட்டால், குறித்த வாக்காளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட முடியும்.

இத‍ேவேளை வாக்களார் பதிவு பட்டியல் விபரங்களை அனைத்து கிராம கிராம சேவையாளர்களும் அந்ததந்த தேர்தல் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், அது தொடர்பில் கிராம சேவையாளர்களுடன் இணைந்து ஆணைக்குழு செயற்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.