மிகப்பெரிய பேரணியை நடத்தி வேட்பாளரை அறிவிப்போம் – ரவீந்திர சமரவீர

382 0

நாங்கள் காலி முகத்தில் ஒரு பெரிய பேரணியை நடத்தி எமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, பதுளையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், நாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டுவருவது என்றும் அவர் கூறினார்.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்விற்கு மதத்தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எனப் பலரும் வருகை தந்துள்ளனர்.