மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

322 0

b-5கிழக்குமாகாண மாற்றுத்திறனாளிகளின் சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கே.என்.எச் நிறுவன அனுசரணையில் 2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின்  சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு  மாநகர சபை மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டார்.

இன்று இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளினால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், மாணவர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிறுவன உறுப்பினர்களுக்கு பிரதம அதிதியால் சின்னங்களும் சூட்டப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.வியாலேந்திரன், பிரதேச செயலாளர் வி.தவராஜா மற்றும் அரச அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களா என பலர் கலந்துகொண்டனர்.

bb1 bb b4 b3 b2 b bbbbbbbb bbbbbb bbbbb bbbb bbb