வவுனியாவில் துப்பாக்கி மகசீன்கள் மீட்பு

253 0

வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் துப்பாக்கி மகசீன்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளன.

நேற்று காலை உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் உலுக்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் ரி56 ரக  துப்பாக்கிக்கு பயன்படும் மகசீன்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளை அவதானித்ததுடன், விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த கைகுண்டினை  அப்பகுதியில் இருந்து விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் அகற்றவுள்ளதாக பொலிசார் மேலும்  தெரவித்தனர்.