மீண்டும் பிள­வு­படும் சுதந்­திரக்கட்சி

265 0

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

எதிர்­வரும் 11ஆம் திகதி ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. இதில் மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் தலை­வ­ராக பங்­கேற்­க­வுள்­ள­துடன், தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் பெய­ரையும் அறி­விக்­க­வுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்­கேற்­பதா இல்­லையா என்­பது குறித்து, கடந்த 6ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் கூடி ஆராய்ந்­தி­ருந்­தனர்.

இதன்­போது, மாநாட்டில் பங்­கேற்கவேண்டும் என ஒரு தரப்பும், பங்­கேற்கக்கூடாது என மற்­றொரு தரப்பும் வாதிட்­டன.

இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான கூட்­டணி தொட­ர்­பான முடிவு இன்­னமும் எடுக்­கப்­ப­டாத நிலையில், பொது­ஜன பெர­மு­னவின் மாநாட்டில் பங்­கேற்க வேண்டாம் என சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஜனா­தி­பதி கோரி­யி­ருந்தார்.  அதன் பின்னர் அவர் நேற்­று­முன்­தினம் அதி­காலை கம்­போ­டி­யா­வுக்குப் புறப்­பட்டுச் சென்று விட்டார்.

சுதந்­திரக் கட்­சியின் இந்த முடிவை நேற்­று­முன்­தினம் கட்­சியின் பொதுச்­செ­யலர் தயா­சிறி ஜய­சே­கர அறி­வித்­தி­ருந்தார்.

எனினும், சுதந்­திரக் கட்சி தலை­மையின் இந்த முடி­வுக்குக் கட்­டுப்­படப் போவ­தில்லை என சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

தயா­சிறி ஜய­சே­கர தவிர்ந்த சுதந்­திரக் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள் இந்த மாநாட்டில் பங்­கேற்­க­வுள்­ள­தாக எஸ்.பி.திசாநா­யக்க தெரி­வித்தார்.

அத்­துடன் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு தாம் ஆசி வழங்கப் போவ­தா­கவும் அவர் கூறினார்.

தானும் இந்த மாநாட்டில் பங்­கேற்கப்போவ­தாக, சுதந்­திரக் கட்­சியின் மற்­றொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டிலான் பெரே­ராவும் கூறி­யுள்ளார். இதற்­கி­டையே இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற நிலையில், ஸ்ரீ­லங்கா   சுதந்திரக் கட்சித் தலைமை மாநாட்டில் பங்கேற்க தடைவிதித்துள்ளமை குறித்து பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி அடைந்துள்ளது.