வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று

347 0

வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள்  சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் மதியம்  திடீரென  கடும்காற்று வீசியது. இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஒரு வீடும் 4 அங்கத்தவர்களும், பெரியபுளியாளங்குளத்தில் ஒரு வீடும் 2 அங்கத்தவர்களும், முதலியார் குளத்தில் 2 வீடும் 8 அங்கத்தர்வர்களும் பாதிப்படைந்துள்ளனர். வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடும் 3 அங்கத்தவர்களும், நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடும் ஒரு அங்கத்தர்களும் என 6 வீடுகளும், 18 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.  குறித்த வீடுகளின் கூரைப்பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் ஏ9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து விழுந்து கார் ஓன்றும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.