நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி ஒருவர் பலி

235 0

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகல் – புத்தளம் வீதியின் சாரகம பகுதியில் இடம்பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) இரவு 9.50 மணியளவில்ல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாஸ்பொது, பெல்லன்தெனிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய மஹேஷ் புத்திக எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.