ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

226 0

இராகமை, மகுல் பொக்குன பகுதியில் ஹெரோனுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 290 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகுல் பொக்குன பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கிரான்பாஸ், ஸ்டெஸ் வீதியின் ஹெரோனுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடன் இருந்த 10 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.