சி.ரி.ஐ.டி. பணிப்பாளராக சி.ஐ.டி.பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க

281 0

சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சராக செயற்பட்ட ஜே.பி.டி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக் குழு வழங்கியுள்ளது.

இதுவரை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இருந்த வருண ஜயசுந்தர பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்ற நிலையில், சி.ரி.ஐ.டி. பணிப்பாளர் பதவியின் வெற்றிடம் ஏற்பட்டது.

இந் நிலையில் பதில் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சர் ஜகத்  நிஷாந்த கடமையாற்றி வந்த நிலையிலேயே பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சி.ஐ.டி. பொலிஸ் அத்தியட்சர்  ஜே.பி.டி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.