பீடி இலைகளுடன் 6 இந்தியர்கள் கைது

293 0

இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் நேற்று (29) 2379 கிலோ பீடி இலைகளுடன் 6 இந்தியர்களை அவர்களுடைய மீன்பிடிப் படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் இருந்து சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடக்கும் இலங்கை பிராந்திய கடலுக்குள் சந்தேகத்திற்கிடமான மீன்பிடித் படகு ஒன்று இருப்பதை கடற்படையினர் கண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து பீடி இலைகளைக் கொண்ட 74 பொதிகள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை காவலில் வைக்கப்பட்ட பீடி இலைத் தொகை, மீன்பிடி படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.