விபத்தில் 6 மாத குழந்தை பரிதாபமாக பலி

248 0

அனுராதபுரம், பதவியா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் – பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையான இசுற செத்சிறு என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.