ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது

333 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவ, பிலிமதலாவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது 48 கிராம 891 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குருகம, முருதலாவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அங்குலான பகுதியில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 10 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.