இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

234 0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி குமரி தோட்ட பிரிவில் இரு குழந்தைகளின் தந்தையான மனோஜ் என்பர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட நபரை காணவில்லை என உறவினர்கள் தேடும் போது வீடு பூட்டி இருந்ததை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்த போது  புடவையை பயன்படுத்தி தூக்கிட்டுள்ளார்.

இதனை கண்ட உறவினர்கள் உடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போது உயிரிழந்ததாக  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு விருகின்றமை குறிப்பிடத்தக்கது.