மஹிந்தவுடன் இணைந்து புகைப்பட ஊடக கண்காட்சியை பார்வையிட்ட மைத்ரி!

360 0

இலங்கை புகைப்பட ஊடகவியலாளர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட ஊடக கண்காட்சி 2019 ஐ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் பார்வையிட்டார்.

செய்திப் பெறுமதியைக் கொண்ட புகைப்படங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சி இன்றும் நாளையும் கொழும்பு – 07 ஹோட்டன் பிளேசில் உள்ள ஜே.டி.ஏ.பெரேரா கலையரங்கில் இடம்பெறுகின்றது.

புகைப்பட ஊடகத் துறையின் மூலம் சமூக பொருளாதார, கல்வி, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக மக்களுக்கு அறிவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி கூடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை புகைப்பட ஊடகத்துறை சங்கத்தின் தலைவர் தமிந்த ஹர்ஷ பெரேரா, செயலாளர் குஷான் பதிராஜ ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் ஜனாதிபதி குறிப்பொன்றை பதிவு செய்ததுடன், விருது பெற்ற முன்னணி புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுடன் குழு புகைப்படத்திலும் தோற்றினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கலைஞர்கள் மற்றும் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.