யாழில் விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி(படங்கள் இணைப்பு)

293 0

download-3

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்தில் யாழ். அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுகந்தராசா சுலக்சன் மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நடராசா கஜன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வந்த நிலையில், கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு சென்றுகொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியின் மதிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்,சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

download download-2 download-1