பாதாள உலக கும்பலின் பிரபலங்களான மாகந்துர மதூஷ் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் ஆகியோருடன் நெருக்கமான உறவை பேணி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருணளு பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தர்காநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சஞ்சீவ புஷ்பகுமார எனவும் கொலை சம்பவங்களுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.