தானியங்கி துப்பாக்கிகள், ரவைகள் வைத்திருந்த நபர்களுக்கு விளக்கமறியல்

315 0

தானியங்கி துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ஒரு தொகை ரவைகள் என்பன வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் அவரது நண்பரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி பதில் மஜிஸ்ட்ரேட் நீதிபதி பீ.கே.எல். பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உடுகம தெற்குப் பகுதியில் வசிக்கும் நிராஜ் அசங்க ஜயவர்தன எனும் பொடி சுத்தா என்பவரும், தொடந்துவவில் வசிக்கும் எரங்க லக்மால் திலகரத்ன எனும் சந்தேகநபர்கள் இருரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.