துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலி

290 0

ரத்கம – கெகில்ல மண்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெவதெனிய – கபுமுல்ல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என இதுவரையில் இனங்காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.