சேவையில் ஈடுபடும் ரயில் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றம்

275 0

நாளாந்தம் மருதானை ரயில் நிலையத்தில் இருந்து மாத்தறை வரை செல்லும் ரயில் 8058 என்ற இலக்கத்தை கொண்ட றுகுனு குமாரி கடுகதி ரயில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஹபராதுவ ரயில் நிலையத்தலில் நிறுத்தப்பட மாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மருதானை ரயில் நிலையத்தலிருந்து காலை 6.05 மணிக்கு மாத்தறை வரையில் செல்லும் 8060 என்ற இலக்கத்தை கொண்ட கடுகதி ரயிலும் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து காலை 4.25 மணிக்கு மருதாணையை நோக்கி வரும் இலக்கம் 8061 என்ற கடுகதி ரயிலும் அடுத்த மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஹபராதுவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட மாட்டாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வார இறுதியில் சனி மற்றும் ஞயிறு தினங்களில் மருதாணை ரயில் நிலையத்திலிருந்து காலை 6.05 க்கு மாத்தறை வரை செல்லும் 8060 இலக்க கடுகதி ரயில் அடுத்த மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அஹங்கம ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.