ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

314 0

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்மல, ஹொரொம்பாவ பிரதேசத்தில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 806 கிராமும் 660 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர றத்மலானை பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் 02 கிராமும் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பேலியகொட, நுகேபார பிரதேசத்தில் 03 கிராமும் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.