வேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

256 0

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.சி.சண்முகம்

நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் வருகிற 22-ந்தேதி காலை முதல் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்.

அமைச்சர் கேசி வீரமணி , எம்எல்ஏ ரவி மேற்பார்வையில் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 71 பேரை கொண்ட குழுவை திமுக நியமித்த நிலையில் அதை விட 2 மடங்கு கூடுதலாக அதிமுக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.