வாள்வெட்டில் ஈடுபட்டவர் விசேட பொலிஸ் குழுவால் அதிரடியாக கைது (படங்கள் இணைப்பு)

321 0

k800_image5யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு களம் இறங்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இன்று மாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.கே.எஸ் வீதி கொக்குவில் பகுதியில் வைத்தே இவ் இளைஞர் விசேட பொலிஸ் குழுவால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் யாழில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தேடப்பட்டுவரும் 3 பேரில் ஒருவரான பிரகாஸ் என்பவரின் நேருங்கிய நண்பர் என்றும், அவரும் கடந்த காலங்களில் இவர்களுடன் சேர்ந்து வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

k800_image4
குறித்த இளைஞர் கொக்குவில் இந்துக் கல்லூரி பாடசாலை முடிவடையும் நேரத்தில் கொக்கவில் பகுதியில் வந்து தனது சக நண்பர்களுடன் சேர்ந்து பாடசாலை மாணவிகளுடன் பகிடி வதைகளில் ஈடுபடுவார் என்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

k800_image1
கைது செய்யப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணையின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

k800_image5