வத்தளையிலிருந்து மடூல்சீமையிலுள்ள உலக முடிவு இடத்தைப் பார்க்கச் சென்ற உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் இன்றுமுற்பகல் 11 மணியளவில் குளவிக்கொட்டுக்கிலக்காகியுள்ளனர்.
வத்தளையிலிருந்து பத்துப் பேர் கொண்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மடூல்சீமையிலுள்ள “ உலக முடிவு” இடத்தைப் பார்க்கச் சென்றனர். இதன்போது மரமொன்றிலிருந்து குளவிக் கூடு கலைந்து குறித்த சுற்றுலாப் பயணிகளை கொட்டியதில். ஐந்து பேர் மெட்டிகாதன்ன அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வரமும் இதுபோன்று சுற்றுலாப் பயணிகள் சிலர் குளவிகொட்டுதலுக்கு இலக்காகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

