அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது-சாகல

307 0
அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் எந்த விதத்தில் வந்தாலும் அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மொரவக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அபிவிருத்தி வேகம் அதிகரிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கட்சி தேர்தலை எதிர்ப்பார்த்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் அதற்காக முறையான நடவடிக்கைகள் கட்சியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.