பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் பலி

239 0
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வீதியின் வலஹந்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுபொல்வத்த, வலஹந்துவ பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.

சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.