தூத்துக்குடியில் கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி

329 0

தூத்துக்குடியில் கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.