ஹம்பாந்தோட்டை ஏரியில் மிதந்து வந்த சடலம்

247 0

ஹம்பாந்தோட்டை பந்தகிரி ஏரியில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும் 31வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பந்தகிரி ஏரியில் அனுமதியின்றி ஒரு குழுவினர் மீன் பிடித்து வந்துள்ளனர். அந்த நேரம் மீனவ சங்கத்தின் படகு வந்துள்ளதால் மீன் பிடியில் ஈடுப்பட்டிருந்தவர்கள் தமது படகிலிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வாறு தப்பிக்க முயன்றவர்களில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும் மீனவர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்ட பாதுகாப்பு பிரிவினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.