அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை விவாதத்துக்கு

294 0

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளையும் (10) நாளை மறுதினமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (08) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மே மாதம் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது