களுத்துறையில் 34 மணி நேர நீர்வெட்டு!

242 0

களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 10.00 மணிமுதல் நாளை இரவு 08.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

வாஸ்கடுவ, வாத்துல, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்தை மற்றும் நாகொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் ஹோகந்தர பிரதேசத்திலும் நாளை காலை 09 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந் நிலையில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மா நகர சபைக்கு உட்பட்ட பகுதி, மகரகம, பொரலெஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதி ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வழடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.