மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது- ருவன்

261 0

தற்போதைய அரசாங்கத்திலேயே மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கடத்தல், தாக்குதல், வௌ்ளை வான் , ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு சம்பவங்களும் கடந்த 4 வருடங்களில் இடம்பெறவில்லை.

அந்தவகையில் கடந்த அரசாங்கத்தை விட தற்​போதைய அரசாங்கத்திலேயே  அதிக சுதந்திரத்தை மக்கள் பெற்றுள்ளனர்.

மேலும் அழுத்தம், அச்சுறுத்தல் இன்றி வெகுசன ஊடகங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயற்பட்டு வருகின்றோம்” என ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.