அர­சுக்கு எதி­ராக மீண்டும் வரு­கி­றது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை: 10,11இல் விவாதம்

330 0

*எமக்குள் பிள­வுகள் இல்லை எதிர்­கொள்ளத் தயார்: ஐ.தே.க
*கடமை தவ­றி­ய­வர்­களை வீட்­டுக்கு அனுப்ப ஒன்­றி­ணை­யுங்கள்: ஜே.வி.பி
*மஹிந்த, மைத்­திரி அணி­களும் ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு தீர்­மானம்
*ஹக்கீம், ரிஷாத் எதிர்ப்பு: கூட்­ட­மைப்பு கூடிப்­பே­சுமாம்

ஏப்ரல் 21ஆம் திகதி  இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலைத் தடுப்­ப­தற்கும், நாட்டு மக்­களைப் பாது­காப்­ப­தற்கும் தவ­றி­யமை மற்றும் தற்­கொலை தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 21 நாட்­களின் பின்னர் இன­மொன்றை குறி­வைத்து நடத்­தப்­பட்ட இன­ரீ­தி­யான வன்­மு­றை­களைத் தடுக்கத் தவ­றி­யமை ஆகிய   கார­ணங்­களை முன்­வைத்து மக்கள் விடு­தலை முன்­னணி இந்த   நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்­ளது. 

இந்­நி­லையில் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை வெற்­றி­கொள்­வது தொடர்பில் ஆளும் தரப்­பினர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில்  குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்து ஐ.தே.முன்­னணி தலை­மை­யி­லான ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கு­ரிய முனைப்­புக்­களை எதிர்த்­த­ரப்­பி­னரும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இது­தொ­டர்­பாக அர­சியல் தரப்­புக்கள் சில தீர்­மா­னங்­களை எடுத்­துள்ள நிலையில் மேலும் சில தரப்­புக்கள் அடுத்­து­வரும் தினங்­களில் இறுதி முடி­வு­களை எட்­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளன. அவ்­வி­ட­யங்கள் வரு­மாறு,


எமக்குள் பிள­வுகள் இல்லை எதிர்­கொள்ளத் தயார்: ஐ.தே.க
சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்­கையில், அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். அதனை நிச்­ச­ய­மாக தோல்­வி­யடைச் செய்வோம். அதற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து விட்டோம் என்றார்.

மேலும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கிறிஸ்­தவ சம­யத்­தினைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மேற்­படி பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிப்­பது அல்­லது வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­காது விடு­வது பற்றி ஆராய்ந்து வரு­வ­தாக வெளி­யான தக­வல்கள் குறித்து கருத்து வெளி­யிட்ட அவர், அவ்­வா­றான எந்த பிள­வு­களும் எமது கட்­சிக்­குள்ளோ அல்­லது பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­குள்ளோ கிடை­யாது. நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக செயற்­ப­டுவோம். ஜன­நா­ய­கமும் உண்­மையும் ஒரு­போதும் மடிந்து விடாது என்றார்.

கடமை தவ­றி­ய­வர்­களை வீட்­டுக்கு அனுப்ப ஒன்­றி­ணை­யுங்கள்: ஜே.வி.பி
மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­விக்­கையில், அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தி­களால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டலாம் என்று புல­னாய்வுப் பிரி­வி­னரும், சர்­வ­தேச புல­னாய்வுத் தரப்­புக்­களும் எச்­ச­ரித்­தி­ருந்­த­போதும் அதனைத் தடுப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. மக்கள் ஆணை­பெற்ற ஆட்­சி­யா­ளர்கள் நாட்டு மக்­களைப் பாது­காக்கத் தவ­றி­விட்­டனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் நடை­பெற்­றன. அதன் பின்னர் 21 நாட்­களில் குறித்த இனத்­த­வர்­களை  இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்கும் ஆட்­சி­யா­ளர்கள் தவ­றி­யி­ருந்­தனர்.

இந்தச் சம்­ப­வங்கள் நடந்­தேறும் போது நாட்டின் பிர­தான ஆட்­சி­யாளர் நாட்­டி­லேயே இல்லை. இவ்­வா­றான நிலையில் தற்­பொ­ழுது நாட்டை ஆட்சி செய்­ப­வர்­க­ளுக்குத் தொடர்ந்தும் ஆட்­சியில் இருப்­ப­தற்குத் தார்­மிக உரிமை இல்லை. இதனை மனதில் கொண்டு எமது பிரே­ர­ணைக்கு   அனைத்து தரப்­பி­னரும் ஆத­ர­வ­ளிக்க வேண்டும். குறிப்­பாக, ஐக்­கிய தேசியக் கட்­சியின் கிறிஸ்­தவ உறுப்­பி­னர்கள் சிந்­தித்து செயற்­ப­டு­வார்கள் என்ற நம்­பிக்கை உள்­ளது என்றார்.

மஹிந்த, மைத்­திரி அணி­களும் ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு தீர்­மானம்
அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­ற­லி­லி­ருந்து வில­கி­ய­மையை மையப்­ப­டுத்தி அர­சுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­படும் இந்­தப்­பி­ரே­ர­ணையை ஆத­ர­வ­ளிப்­பது என்று எமது அணி தீர்­மா­னித்­துள்­ளது என மஹிந்த அணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரி­வித்தார்.

அதே­நேரம், அர­சாங்­கத்தை வீழ்த்­து­வ­தற்கு யார் அல்­லது எந்த கட்சி நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தாலும் எவ்­வித கட்சி பாகு­பா­டு­மின்றி நாம் அதற்கு ஆத­ரவு வழங்­குவோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­த­னவும் குறிப்­பிட்டார்

மேலும், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான பிரே­ர­ணையை நாம் ஆத­ரிக்கும் முடி­வி­லேயே இருக்­கின்றோம். இருப்­பினும் அடுத்து வரும் நாட்­களில் எமது கட்­சியின் தலை­மை­யுடன் கலந்­து­ரை­யா­டியே இறுதி முடி­வினை அறி­விப்போம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அணியின் சார்­பாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான, தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

ஹக்கீம், ரிஷாத் எதிர்ப்பு கூட்­ட­மைப்பு கூடிப்­பே­சுமாம்

அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன நம்பிக்கையில்லாப்  பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அதன் உயர்மட்டத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், சமகால விடயங்களை கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை பாராளுமன்றக்குழுவை கூட்டி கலந்துரையாடியே இறுதி முடிவினை எடுக்கும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேநேரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் அடுத்துவரும் நாட்களிலேயே தீர்மானிக்கவுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.