கணவருக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது

466 0

சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப் பகுதியில் வைத்து நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் முருகமூர்த்தி வீதி மல்வத்தைப் பகுதியில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த போது, பொலிஸார் இந்தப் பெண்ணைப் சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது, அவரது கைப் பையில் இருந்து, 8 கிராமும், 400 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்திய போது, சிறைச்சாலையில் உள்ள கணவருக்காக, வேறு நபரிடம் வாங்கிச் செல்வதாக மனைவி தெரிவித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் பெண்ணை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.