ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!

325 0

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒருநாள் சேவை தற்காலிகமாக இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலையத்தின் கணினிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியனா குணதிலக தெரிவித்துள்ளார்.

கணினிகளில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆட்பதிவு திணைக்களத்தின் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.