ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் கண்டிக்கு செல்ல வேண்டாம்!

328 0

முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம் சுமத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

7 ஆம் திகதி  பொது பல சேனா அமைப்பு கண்டியில் மாநாடோன்றினை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.அத்தோடு இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பெறுமளவில் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான திட்டங்களை முறியடிப்பதற்கு 7 ஆம் திகதி வரை நோன்பு நோற்று முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சமாதானம் நிலவுவதற்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் சகல முஸ்லிம் மக்களிடமும் கோரப்படுகின்றது.

மேலும் இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் , கண்டி நகர் ஊடாக பயணம் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்படுகின்றது.