அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் மங்­கள-ராஜித வாக்­கு­வாதம்

240 0

சீனாவின் சிக­ரெட்­டுக்­களை இலங்­கைக்கு  இறக்­கு­மதி செய்யும்  விடயம் தொடர்பில்  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  அமைச்­சர்­க­ளான  மங்­கள சம­ர­வீ­ர­விற்கும்   ராஜித சேனா­ரட்­ன­வுக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம்  இடம்­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது.  இதன்­போது  சுகா­தார அமைச்சர்  ராஜித சேனா­ரட்ன   சீனா­வி­லி­ருந்து சிக­ரெட்­டுக்­களை இலங்­கைக்கு இறக்­கு­மதி  தீர்­மா­னத்தை    நிதி அமைச்சர் வாபஸ்­பெ­ற­வேண்டும்.   இவ்­வாறு    இறக்­கு­மதி செய்­வது   சிகரெட் பாவ­னையை அதி­க­ரிப்­ப­தற்கு   உதவும். எனவே இதற்கு அனு­ம­திக்க முடி­யாது என்று  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இதற்கு பதி­ல­ளித்த   நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர  சீனா­வி­லி­ருந்து   சட்­ட­வி­ரோ­த­மாக   பெரு­ம­ள­வான சிக­ரெட்­டுக்கள் இலங்­கைக்கு கொண்டு  கொண­டு­வ­ரப்­ப­டு­கின்­றன. இதற்கு பதி­ல­டி­யா­கவே  சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யினை  கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே சட்­ட­பூர்­வ­மாக  சிக­ரெட்­டுக்­களை  இறக்­கு­மதி செய்ய  தீர்­மா­னிக்­கப்­பட்­டது.  இலங்கை புகை­யிலை நிறு­வ­ன­மா­னது  சீனாவில் சிக­ரெட்­டுக்கள்  இறக்­கு­மதி செய்­யப்­பட்டால்   தமது வியா­பாரம்   பாதிக்­கப்­படும் என்­ப­தனால் பல­த­ரப்­பி­ன­ரையும்   அணு­கி­வ­ரு­கின்­றனர்.    இதன் கார­ண­மாக   எதிர்ப்­புக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.   இந்த  விட­யத்தில்  நான் உங்­களை குறிப்­பி­ட­வில்லை என்று   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதன்­போது கருத்­து­ரைத்த  அமைச்சர் ராஜித சேனா­ரட்ன  நாம்  உலக சுகா­தார அமைப்பின்  புகை­யி­லைக்கு எதி­ரான ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கின்றோம். இந்த நிலையில்  சீனா­வி­லி­ருந்து  சிக­ரெட்­டுக்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டால்  அதன் பாவனை அதி­க­ரிக்கும். அத்­துடன்   உலக சுகா­தார நிறு­வ­னத்­திற்கு நாம் பதி­ல­ளிக்க முடி­யாது போகும். இதனால் தான் நாம் எதிர்ப்பு தெரி­விக்­கின்றோம் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சீனா­வி­லி­ருந்து  பெரு­ம­ள­வான உல்­லாசப் பய­ணிகள்  இலங்­கைக்கு வரு­கின்­றனர்.   அவர்­க­ளுக்கு ஏற்­ற­வ­ச­திகள் இங்கு செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அவர்கள் இலங்கை வந்­ததும் தமது நாட்டு சிக­ரெட்­டுக்­க­ளையே   கோரி­நிற்­கின்­றனர். எனவே இவ்­வாறு உல்­லாசப் பய­ணத்­து­றையை வளர்ச்­சி­ய­டைய  செய்­ய­வேண்­டு­மானால்   இத்­த­கைய சில முடி­வு­களை எடுக்கவேண்டும் என்று  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

இரு அமைச்சர்களுக்குமிடையிலான  கருத்து முரண்பாட்டை அடுத்து   இந்த  விடயம்  குறித்து அமைச்சரவையில்  தீர்மானம் எடுக்கப்படவில்லை.  அடுத்தவாரத்தில் இது குறித்து தீர்மானம்  எடுப்பது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.