புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் பலி

235 0
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (01) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர புகையிரதத்தில் மோதியோ குறித்த மாணவன் உயிரிழந்துள்ளான்.

கிளிநொச்சி மற்றும் பரந்தன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 14 வயதுடைய ராஜேஷ்வரன் லதூஷன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.