பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரை தெரிவுக் குழுவுக்கு அழைக்கவும்- அனுர

223 0

பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் சாட்சி வழங்க அழைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறுபவராயின் அவரும் தெரிவுக் குழுவில் ஆஜராக வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க அரசியல்வாதிகளுக்கு முடியுமாக இருந்துள்ளதாகவும், அதனை அவர்கள் செய்யாமைக்காக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஜே.வி.பி. தலைவர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.