புகையிரத வேலை நிறுத்தத்திற்கு எதிராக ரயில்வே திணைக்களம் முறைப்பாடு

275 0
புகையிரத தொழிற்சங்கத்திற்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்திருக்கும் நிலையில் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்துள்ளமைக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.