கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 08.15 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தீயினால் சிறியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக நிலைய உரிமையாளரினால் தவறுதலாக இடம்பெற்ற வாயுக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.