மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்-சம்பிக ரணவக

318 0

மரணதண்டனை குறித்து பௌத்தர்கள் என்ற அடிப்படையில் சிந்திக்கின்றபோது ஒருவரின் உயிரைப் பறித்தால் மீண்டும் அவருக்கு உயிர்கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக, மரணதண்டனைக்கு ஆதரவா, இல்லையா என்று ஒருவார்த்தையில் பதிலளிப்பது மிகவும் கடினமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கெக்கிராவை பொதுச்சந்தை தொகுதியை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எமது நாட்டின் நீதித்துறையில் காணப்படும் சில குறைபாடுகள் காரணமாக குற்றச்செயல்களைப் புரியும் குற்றவாளிகள் தண்டனைகளுக்கு அஞ்சுவதில்லை.  எனவே மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் நாட்டில் முறையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி, அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.