மருத்துவமனையில் தீ – 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு

289 0

odisha-hospital-fire_07272இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு பலர் பலியான நிலையில் அங்கு 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்தனர்.

சம்பவத்தில் மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பத்தை தொடர்ந்து அங்கு 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.