பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்டாயமாக தான் ஆஜராவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (24) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெரிவு குழு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பினும் அதன் பிரதான நோக்கம் உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதே ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்கட்சி தெரிவுக்குழு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் கட்சி தவைர்களின் கூட்டத்தின் போது அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

