பல்­க­லைக்­க­ழக வெட்­டுப்­புள்ளி ஜூலையில் வெளி­யி­டப்­படும் – லக்கி ஜய­வர்­தன

339 0

இவ்­வாண்­டுக்­கான பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு மாண­வர்­களை உள்­வாங்­கு­வ­தற்­கான வெட்­டுப்­புள்ளி,  ஜூலை மாதம் வெளி­யி­டப்­ப­டு­மென பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜய­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கான வெட்­டுப்­புள்­ளியை வெளி­யி­டு­வதில் ஏற்­பட்­டுள்ள தாமதம் தொடர்பில்,  எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்­த­போதே, அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்­தரப் பரீட்­சைக்குத்  தோற்­றிய மாண­வர்­க­ளுக்­கான வெட்­டுப்­புள்ளி,  ஒரு வரு­ட­மா­கியும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை எனவும், இது அவர்­களின் எதிர்­காலம் தொடர்பில் கடு­மை­யான கேள்­வி­களை எழுப்­பு­வ­தா­கவும் எதிர்க்­கட்சித்  தலைவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் பதில் உயர் கல்வி அமைச்சர் மேலும் தெரி­வித்­த­போது, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கான வெட்­டுப்­புள்­ளியை இந்த மாதம் வெளி­யிட ஏற்­கெ­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­ டி­ருந்­தது.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மாக தாம­த­மா­கி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், எதிர்­வரும் ஜூலை மாதத்தின் இரண்­டா­வது வாரத்தில் பல்க லைக்கழகங்களுக்கு மாணவர்களை உள் வாங்குவதற்கான வெட்டுப்புள்ளியை

வெளியிடத்  தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.