போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள் சேவையில்…

358 0

இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சலுகைகளுடனான உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

ஒரு பஸ்ஸின் பெறுமதி சுமார் 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். மேலும், கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை போன்ற பகுதிகளுக்காக பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.