மதத்தை கைவி­டு­ப­வரை கொலை செய்ய வேண்டும்!

324 0

இஸ்லாம்  மதம் குறித்த விமர்­ச­னங்­களை முன்­வைத்த கார­ணத்­தி­னாலும் வேறு சில சமூக சிந்­தனை செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த கார­ணத்­தி­னாலும் சஹ்ரான் என்னை கொலை­செய்ய திட்டம் தீட்­டி­யி­ருந்தார். 

இந்த நாட்டின்  கல்வி அமைச்­சினால் முஸ்லிம்  பாட­சாலை மாண­வர்­க­ளுக்குவழங்­கப்­படும் புத்­த­கத்தில் கூட   மதத்தை கைவி­டு­ப­வரை கொல்ல வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என மத­சார்­பற்ற அமைப்பை சேர்ந்த ரிஸ்வின் இஸ்மத் என்ற நபர் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இவ்­வா­றான விட­யங்கள் பாட­சாலைப் புத்­த­கங்­களில் இருக்கும் நிலையில்  பயங்­க­ர­வாதி  சஹ்ரான் போன்­ற­வர்கள் சிரி­யா­வி­லி­ருந்து வரத்­தே­வை­யில்லை. இங்­கேயே அதற்­கான சூழல் உள்­ளது  என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை  வாக்­கு­மூலம் வழங்­கிய  ரிஸ்வின் இஸ்மத் இந்த கார­ணி­களை கூறினார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

நான் பிறப்பில் முஸ்லிம்.  எனினும்  2014ஆம் ஆண்­ட­ளவில் நான் அந்த மதத்­தி­லி­ருந்து வில­கினேன்.  இப்­போது நான் மத சார்­பற்­றவன். என்னை ஒரு நாஸ்­திகன் என அடை­யா­ள­ப­டுத்­தலாம்.  எனது முகப்­புத்­த­கத்தின் ஊடாக இஸ்லாம் மதம் பற்­றிய விமர்­ச­னங்­களை நான்  முன்­வைத்­தி­ருந்தேன். நான் எனது வாழ்க்­கையில் பல­வற்றை  மதத்­திற்­காக பங்­க­ளித்­தவன் என்ற வகையில் நான் அவ்­வா­றாக எழு­தி­யி­ருந்தேன். ஆனால் இதற்கு எதி­ராக எனக்கு கொலை அச்­சு­றுத்­தல்கள் எழுந்­தன. அவை முகப்­புத்­த­கங்­களின் ஊடாக முன்­வைக்­கப்­பட்­டன. அவற்றில் போலிக் கணக்­கு­களும் காணப்­பட்­டன. இது தொடர்பில் நான் முத­லா­வது முறைப்­பாட்டை 2016ஆம் ஆண்­டிலும்   அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜுலை­யிலும் ,ஆகஸ்­டிலும்  செய்­தி­ருந்தேன்.   சைபர் கிரைம் பிரி­விலும் இரண்டு தட­வைகள் முறைப்­பாடு செய்தேன். அதன் பின்னர் ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து பொலிஸ் அதி­கா­ரிகள் எனது வீட்­டுக்கு இரண்டு தட­வைகள் வந்­தனர்.

நான் சரி­யான முக­வ­ரியில் இருக்­கின்­றேனா அச்­சு­றுத்தல் இருக்­கி­றதா என்று பார்த்துச் சென்­றனர். பின்னர் பயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரி­வுக்கு வரு­மாறு கூறி­யுள்­ளனர். 2017ஆம் ஆண்டு தெஹி­வ­ளையில் உள்ள சிறுவர் பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் சிறு­மிகள் துஸ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக நானும் எனது நண்­பரும் தலை­யிட்­டி­ருந்தோம். இதனை நடத்­து­பவர் வஹா­பிச கொள்­கையைக் கொண்ட வைத்­தியர் ஒருவர். இது தொடர்­பான வழக்கு பதி­வு­செய்­யப்­பட்டு நுகே­கொட நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.  இதே­வேளை சமூக நீதிக்­கான அமைப்­புடன் இணைந்து நாம் ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்­தினோம். இந்த ஆர்ப்­பாட்டம் தொடர்­பாக எனது முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டி­ருந்தேன். இதனைப் பார்த்து சஹ்ரான் என்னை கொல்­லு­மாறு கூறி  நான்கு பேரை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஏன் கொலை அச்­சு­றுத்தல் எனக்கு வந்­தது என்­ப­தனை கூற வேண்­டு­மென்றால் முஸ்லிம் மதத்தை கைவிட்டால் கொல்­லப்­பட வேண்டும் என கூறப்­ப­டு­வது மதத்தில் உள்­ள­தா­லாகும்.   இந்த நாட்டில் கல்வி அமைச்­சினால் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் புத்­த­கத்தில் கூட இது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய புத்­த­கத்தில் கூட வேறு­வி­த­மாக இது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  1981ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட புத்­த­கத்தில், தெளி­வாக  மதத்தை கைவி­டு­ப­வரை கொல்ல வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இஸ்லாம் மதப் புத்­த­கத்தில் 9ஆம் மற்றும் 10ஆம் தரத்­துக்­கான புத்­த­கங்­களில் இந்த விடயம் உள்­ளது. 1980 முதல் 1990 வரை­யான ஆண்­டு­வ­ரையில் வெளி­யான புத்­த­கங்­களில் இவை காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் புதிய புத்­த­கத்தில்  2015, 2016, 2017ஆம் ஆண்டு வெளி­யான புத்­த­கங்­களில் அவ்­வா­றா­ன­வர்­களை தர்ம துரோ­கி­க­ளாகப் பார்க்க வேண்டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

அதில் பழைய சிங்­கள புத்­த­கத்தில் அந்த புத்­த­கத்தை எழு­திய ஆசி­ரியர் குழாம் யார் என குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இரண்டு இடங்­களில் அது தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இஸ்லாம் மதத்தை விட்டு வில­கி­யவர் காபீ­ராக பார்க்­கப்­ப­டுவார் எனவும் சில சந்­தர்ப்­பங்­களில் அதற்கும் கடு­மை­யாக பார்க்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. காபீர் என்­பது வேற்று மதத்­தவர் என்றே அர்த்தம். தமிழ் மொழி­யி­லுள்ள புத்­த­கத்தில் “மரண தண்­டனை” அல்ல “கொலை” என்ற வச­னமே உள்­ளது.  இவ்­வா­றான விட­யங்கள் பாட­சாலைப் புத்­த­கங்­களில் இருக்கும் நிலையில்  பயங்­க­ர­வாதி  சஹரான் போன்­ற­வர்கள் சிரி­யா­வி­லி­ருந்து வரத்­தே­வை­யில்லை. இங்கேயே அதற்கான சூழல் உள்ளது.

இஸ்லாம் மதத்தை கைவிட்டவர்கள் கொல்லப்படவேண்டும் என குர்ஆனில் கூறப்படவில்லை. எனினும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நபி கூறியவை, பின்பற்றியவை என்பதே ஹதீஸ் எனப்படுவதாகும். அரசாங்கத்தினால் வெளியிடப்படும் இஸ்லாம் மதப்புத்தகத்தில் இவ்வாறான விடயம் உள்ளடக்கப்படுமாயின், மதரசாக்களில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் எந்தளவுக்கு வன்முறை விடயங்கள் உள்ளடக்கப்படும் என நீங்கள் சிந்தித்துப் பார்க்கலாம். என்றார்.