கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 108 தேங்காய் உடைத்து வழிபாடு

423 0

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என கோரி நடத்தப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவத்தும் தரமுயர்த்த வேண்டுமெனவும் கோரி வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியுமும் சமூக அமைப்புக்களும், ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர்  ஆலய முன்றலில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டது.

இதன்போது மடுக்கந்த மூவட்டகம ஆனந்த தேரோ, முன்னாள்  வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் களான வினோ நோகதாரலிங்கம், ராஜா குகனேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.