மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக இசுர தேவப்பிரிய நியமனம்!

355 0

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக, ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி வகித்து வந்த நிலையில், அவர் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இசுர தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் சில தினங்களில் தனது கடமைகளை பொறுப்பேற்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.