நாளை மறுதினம் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

341 0

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

அன்று (22) காலை 09 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதி, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைத் பகுதி, கொடிகாவத்த, முல்லேரியா பிரதேச சபை பகுதி, றத்மலானை மற்றும் சொய்சாபுர மாடி வீட்டுத் தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.