விமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத்

489 0

பாராளுமன்ற உறுப்பினர்  விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் இந்தவேண்டுகோளை விடுத்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ,

எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான்  தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை தெரிவித்திருக்கின்றார்.

“எனது தாய்க்கு  சகோதரர் இல்லை , இது போன்ற  பொய்யான பிரசாரங்களை இந்த உயர் சபையிலையே விமல்வீரவன்ச  தொடர்ச்சியாக கூறிவருகின்றார் . தலைமை தாங்கும் உறுப்பினர்  அவர்களே, நான் உங்களுக்கு ஒன்றைகூற  விரும்புகின்றேன்.

குண்டுகள் வெடித்த நாளிலிருந்து விமல் வீரவன்ச  இவ்வாறான  பொய்களை சொல்லிசொல்லி  இனங்களுக்கிடையே குரோதத்தையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றார் அவர் சொல்லுவது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும் . எனவே தான் அவர் எனக்கு எதிராக எந்த விதமான முறைப்பாடுகளையும்  பொலிஸில் இதுவரை  செய்யவில்லை.

இந்த உயர் சபையின்  சிறப்புரிமையை  பயன்படுத்தி இவர் மேற்கொள்ளும்    இவ்வாறான பொய்பிரசாரங்களை ஊடகங்களும்  மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக  கொண்டு செல்கின்றது .

எனது அம்மாவுக்கு எந்தசகோதரரும்  இல்லை எனவும் . இவ்வாறான சம்பவதுடன்  எந்த தொடர்பும் இல்லை எனவும்  நான்பொறுப்புடன் இங்கு  கூற  விரும்புகின்றேன்.

அது மாத்திரமின்றி இது தொடர்பிலான  உண்மைகள்  வெளிவரவேண்டும் எனவும்  விரும்புகின்றேன்” . இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்  தெரிவித்தார்.