மட்டக்களப்பு – வவுணதீவில் வீசிய சுழல் காற்று காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை பலத்த காற்று வீசியுள்ளது.
இதில் சுமார் 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார இதனை தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.